Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படம் என்பதே இல்லாமல் போய்விட்டது. செம படம்,சூப்பர்,இப்படி ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சி என்று மக்கள் வாய் விட்டு,கண்ணீர் மல்க சொல்லி கேட்கவேயில்லை.இப்படி அனைத்து ஏக்கங்களையும்,குறைகளையும் ஒட்டுமொத்தமாக தீர்க்குமளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறதென்றால் அது எங்கேயும் எப்போதும் தான்.தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ இந்த எங்கேயும் எப்போதும்.

சமீபத்தில் வந்த நிறைய படங்களை பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வரும் போது என்னடா படம் இது என்று கோவம் தான் வந்தது.அந்த அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று ஏமார்ந்து வந்தது தான் மிச்சம்.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்து,வெளியில் வரும் போது கண்ணீர் மல்க என்ன படம் டா வாய்ப்பே இல்ல என்று சொல்லித்தான் வெளியே வந்தேன்.அழகான திரைக்கதை,பில்டப் இல்லாத அம்சமான நடிப்பு,ரம்மியமான இசை,கல்நெஞ்சையும் கரையவைக்கும் கிளைமாக்ஸ் இப்படி பல கலவைகள் ஒன்றாக கலந்து,கொடுத்த காசுக்கு திருப்தியை கொடுக்கும் அருமையான காவியம்.
கதை பெரிதாக ஒன்றும் இல்லை,இரண்டு வெவ்வேறு காதல் கதைகள் அழகாக பயணிக்கும் வாழ்க்கையில் விதி ஏற்படுத்தும் விளையாட்டு தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆனால் இந்த கதையை இப்படி மிகமிக அழகாக திரைகதை பண்ண முடியுமா என்றால்,முடியும் என்று ஆச்சர்யபடுத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.படத்தின் தொடக்க காட்சியிலேயே ஒரு பயங்கரமான விபத்தை காட்டிவிட்டு,4 மணிநேரத்திற்கு முன்பு என்று போட்டு விட்டு.பிறகு மீண்டும் திரைகதையில் சற்று வேகம் கூட்டி 6 மாதங்களுக்கு முன் என்று தொடங்கும் கதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பையும்,அழகான காதலையும்,நல்ல நல்ல பாடல்களையும் அட போடவைக்கும் அற்புதமான
காட்சிகளையும் சுமந்துகொண்டு சூப்பராக செல்கிறது.

சென்னையில் இன்டர்வியுக்கு வரும் அனன்யா அவருடைய ஜோடியான சர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளும்,அடிக்கும் லூட்டிகள் வயிறை வலிக்க வைக்கும் காமெடி ரகம்.அதுவும் அனன்யா வாய்ப்பே இல்ல அருமையான நடிப்பு.குழந்தை தனம் கலந்த இயல்பான இவரின் நடிப்பு நிச்சயம் சபாஷ் போடவைக்கும். இவருடைய நடிப்பும்,உடல் பாவனைகளும் லைலாவை நினைவுபடுத்துகிறது.ஊர்வசி,லைலா வரிசையில் நிச்சயம் அனன்யாவுக்கு இடம் உண்டு.சர்வா-அனன்யா இவர்களுக்குள் வரும் காதல் இயல்பாக,நம்பும் விதத்தில் அமைத்திருப்பது அருமை.அனன்யாவுக்கு நாடோடிக்கு பிறகு அமைந்த ஒரு நல்ல படம்.ஒரு நல்ல திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.சர்வாவும் கிடைத்த இடத்தில் எல்லாம் நல்லா ஸ்கோர் பண்ணி இருக்காரு.

ஜெய்-அஞ்சலி இன்னொரு காதல் ஜோடி,இருவருமே நன்கு நடிக்க தெரிந்தவர்கள் என்பதை நிரூபித்திருகிறார்கள்.குறிப்பாக அஞ்சலி அற்புதமான நடிப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி தான் ஹீரோ,ஜெய் தான் ஹீரோயின்.அஞ்சலி மிகவும் தைரியமான ஒரு போலீஸ்காரரின் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.காதலிக்க துவங்கிய உடனே HIV டெஸ்ட் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும்,உடல் தானம் செய்யச் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும் தேட்டர் அதிர கைத்தட்டல்கள் வரும் காட்சிகள்.வரும் போது சம்பளக்கவரை எடுத்துவா என்று ஜெய்யிடம் சொல்லி அதை கண்ணா பின்னாவென செலவு செய்து ஜெய்யை அலற வைக்கும் காட்சி,நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா உலகத்துல இருக்குற எல்லா சரக்கையும் அடிச்சி இருப்பேன் என்று ஜெய்யிடம் சொல்லும் காட்சி,நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ நா இப்பவே கட்டிகுறேன் என்று கட்டி பிடிக்கும் காட்சி.அவர் வேலை செய்யும் இடத்திற்கே வந்து ஜெய்யிடம் பேசும் காட்சி,ஐ லவ் யூ என்று சொல்லும் காட்சி இப்படி பல இடங்களில் அஞ்சலி அசத்தோ அசத்துன்னு அசத்தி அதகளபடுத்துகிறார்.இறுதிக்காட்சியில் அவருக்கே உண்டான தனி நடிப்பின் மூலம் அனைவரையும் அழவைக்கிறார்.நிறைய இடங்கள் சொல்லலாம் அஞ்சலியின் நடிப்பை பற்றி ஆனால் இந்த இடம் போதாது.அங்காடித்தெருவுக்கு பிறகு அஞ்சலிக்கு அமைந்த நல்ல படம் இது.இன்னும் ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.நன்றாக நடிக்க தெரிந்தவர் கதைகளை ஒழுங்காக தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு வரலாம்.

ஜெய்-சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நடித்திருக்கிறார்.கிடைத்த இடத்திலெல்லாம் அஞ்சலியுடன் போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்.இயல்பான நடிப்பு அற்புதமாக வருகிறது ஜெயக்கு.வீட்டுக்கு அடங்குன புள்ள மாரி என்னமா நடிச்சி இருக்காரு.ஜெய்,அஞ்சலியின் அப்பாவை பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி அவர் யாருன்னு தெரியுமான்னு கேட்டவுடன் ஏட்டு என்று சொல்வதும்,எனக்கு யார்ன்னு கேட்டதும் உங்களுக்கு மட்டும் என்ன ஐ.ஜி யா உங்களுக்கும் ஏட்டு தானே என்று சொல்லு காட்சி.காபி ஷாப்பில் மசால் தோசை கேட்க்கும் காட்சி,அஞ்சலியை ஒரு தலையாக காதலிப்பவனிடம் போய் அடிவாங்கி வரும் காட்சி,அஞ்சலியின் அம்மாவுக்கு டாட்டா காட்டும் காட்சி,அஞ்சலியின் அப்பாவிடம் போய் பேசும் காட்சி,துணி கடையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கும் காட்சி இன்னும் நிறைய இடங்களில் ஜெய் வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறார்,அழகாக நடிக்கவும் செய்கிறார்.தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்த ஜெய்க்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.தேவையான நேரத்தில் அருமையான படத்தில் நடித்து தன் நிலையை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் சரவணன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம்.தமிழ் சினிமாவில் பிழைத்துகொள்வார்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.அருமையான திரைகதை.இயல்பான வசனங்கள் என்று படத்தை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து 3 மணிநேரம் சீட்டை விட்டு எங்கும் நகர விடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.தேவையான இடங்களில் பாடல்கள்.அதுவும் நல்ல பாடல்கள்.இப்படி ஒரு கதையை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்லி ஓகே பண்ணாருன்னே தெரியல.இதை எப்படி தயாரிப்பாளர் ஓகே செய்தார் என்பதும் மிகபெரிய ஆச்சர்யம்.படத்தை கமர்ஷியலாகவும் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கருத்துடனும் கொடுத்திருக்கிறார்.இன்றைய சமுதாய விழிப்புணர்வுக்கு தேவைப்படும் அருமையான கருத்தை கொடுத்தது இன்னும் சிறப்பு.இன்றைய பல இயக்குனர்கள் சரவணனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.தேசிய விருதுக்கு நிச்சயம் இந்த படம் செல்லும்,விருதையும் வெல்லும்.சரவணன் சார் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் சத்யா நல்ல இசையமைப்பாளர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.அருமையான பாடல்கள்.மனதை வருடவும் செய்கின்றன,தாளம் போடவும் செய்கின்றன.அனைத்து பாடல்களுமே அற்புதம்.பின்னனி இசையும் அருமையாக இருக்கிறது.இவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.

முருகதாஸ்.சொல்லப்பட வேண்டிய தயாரிப்பாளர்.வெற்றி தயாரிப்பாளர்.அருமையான படத்தை தயாரித்த பெருமை என்றுமே இருக்கும் இவருக்கு.இப்படி ஒரு கதையை ஓகே செய்ததர்க்கே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.படத்தில் வரும் அந்த விபத்து காட்சி நம்மை நிச்சயம் ஒரு நிமிடம் பயப்படவைக்கும்.அருமையான கேமரா.தொடக்க காட்சியும்,இண்ட்ரவல் காட்சியும் அற்புதம்.க்ளைமாக்சில் அந்த ஆம்புலன்சின் பின் புறம் எழுதி இருக்கும் வசனத்துடன் முடிப்பது நச்.


படத்தின் சிறு சிறு கதாபாத்திரங்களும் மனதை விட்டு பிரிய முடியாமல் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.குறிப்பாக தன் மனைவியை 8 மாத கர்ப்பிணியாக விட்டு விட்டு வேலை விஷயமாக துபாய் சென்று 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பி வரும் அந்த கணவர் கண்களை குளமாக்கும் கதாபாத்திரம்.ஜெய்யின் அம்மா கதாப்பாத்திரமும் அவர் தாரை தப்பட்டையை குறிப்பிட்டு படத்தின் துவக்கத்தில் பேசும் வசனம் இறுதியில் சரியாக அந்த கொடுமையான விஷயத்திற்கு சரியாக பொருந்துவது கல் நெஞ்சையும் கரைக்கும்.மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் ஊர் வரை கூடவே வந்து விட வரும் கணவர்,பார்த்த உடனே காதல் வலையில் விழும் காதலர்கள்,அம்மாவுடன் துடுக்குத்தனமாக பேசும் குழந்தை.அஞ்சலியின் அப்பா,அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் அந்த நபர்.அனன்யாவின் அக்கா இன்னும் படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருகின்றனர்.இந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர் சரவணனுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத,தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு படம் இந்த எங்கேயும் எப்போதும்.இப்படி பட்ட படத்தை தந்த இயக்குனரையும்,தயாரிப்பாளரையும்,அந்த குழுவையும் வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்.
மொத்ததில் இந்த எங்கேயும் எப்போதும் - என்றென்றும் எப்போதும் மக்கள் மனதிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

Thursday, September 1, 2011

விநாயகரைப் கும்பிடும் போது குட்டு போட்டுகொள்வது ஏன்?

படித்ததில் பிடித்தது-Part-2.
நண்பர்களே நான் ஏற்கனவே சொன்னது போல,நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவருகிறேன்.அந்த வகையில் இன்று நான் பார்த்து மிகவும் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நாம் விநாயகப்பெருமானை கும்பிடும் போது ஏன் தலையில் குட்டு போட்டுகொள்கிறேம் தெரியுமா?.

ஒருமுறை பொன்னி,பவானி,நர்மதை,தபதி,பென்னை ஆகிய 5 வற்றாத ஜீவ நதி சகோதரிகளும் சந்தோஷமாய் ஆடி,பாடி பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பொன்னி தன் சகோதரிகளிடம்,"நாமே இந்த உலகத்தில் சிறந்தவர்கள்.நம்மை மிஞ்ச யாருமில்லை.இந்த உலகத்தையே நாம் தான் செழிப்பாக வைத்திருக்கிறோம்.எம்பெருமான் சிவனின் தலையிலேயே நம்மை போன்ற ஒரு நதி தான் குடி கொண்டிருக்கிறது.ஆகவே நாம் தான் சிறந்தவர்.நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அகத்திய மாமுனிவர் வந்துகொண்டிருந்தார்.அப்போது அவரை பார்த்த பொன்னி தன் சகோதரி பவானியிடம் யார் இந்த குள்ள முனிவர் என்று கிண்டலாக கேட்க்க,அவர் அகத்தியரை பற்றி சொல்லி விட்டு அவரிடம் இப்படி மரியதை இல்லாமல் பேசாதே அவர் ஈசனின் அருள் பெற்றவர் என்று கூறினார்.ஆனால் பொன்னியோ கேட்கவில்லை,மாறாக இந்த முனிவர்களே ஆண்டவனை தினமும் காலையிலும்,மாலையிலும் பூஜிக்க நம்மையே நாடி,தேடி வந்துதானே குளிக்கின்றனர் என்று திமிராக பேசிவிட்டு,அங்கு வந்த அகத்தியரை அவருடய உயரத்தையும்,உருவத்தையும் வைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்.

பொன்னியின் இந்த செயலை கண்ட அகத்தியர் மிகுந்த கோபமுற்று பொன்னியை எச்சரித்தார்.ஆனால் பொன்னி இன்னும் அதிகமாய் அவரை ஏளனம் செய்ய,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் அகதியர்.அதன் விளைவாக தன் கமண்டலத்தில் அவ்வளவு பெரிய பொன்னி நதியை அடக்கி வைத்துவிட்டர்.பொன்னியால் அங்கும்,இங்கும் ஓடித்திரிய முடியாமல் அகத்தியமாமுனிவரின் கமண்டலத்தில் ஒடுங்கி,அடங்கி போனாள்.இதை கண்ட மற்ற சகோதரிகள் நால்வரும் என்ன செய்வது என்று அரியாமல் நாரதரிடம் போய் முறையிட்டனர்.அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.அவர் இந்த விஷயத்தை விநாயகப்பெருமானிடம் கொண்டு சென்று,காப்பாற்ற வழி செய்யுமாறு கேட்டார்.பெண்மைக்கு ஆணவம் கூடாது.அகத்தியரிடம் அவள் பேசியது தவறு,அதற்கேற்ற தண்டனையை தான் அவள் பெற்றிருக்கிறாள் என்று கைவிரித்துவிட.நாரதர் இது ஜீவ நதியாயிற்றே,இது பரந்து,விரிந்து ஓடினால் தானே நன்மைதரும்.அது படைக்க பட்ட நேக்கமும் அதுதானே என்று விநாயகரிடம் இன்னும் அதிகமாய் கெஞ்சினார்.சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விநாயகர் அவரை அனுப்பிவைத்தார்.

பின்பு விநாயகர் நேராக அகத்தியர் இருக்கும் இடத்திற்க்கு போய்,என்ன செய்து பொன்னியை காப்பாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.அப்போது விநாயகப்பெருமான் காக்கை போல் மாறி அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட,பொன்னி மீண்டும் ஆறாக பெறுக்கெடுத்து ஓட ஆறம்பித்தாள்.இதை கண்ட அகத்தியர் மிகுந்த கோபத்துடனும்,ஆச்சர்யத்துடனும் ஆற்றைப் பார்த்துகொண்டிருந்தார்.விநாயகப்பெருமான் உடனே காக்கை வடிவில் இருந்து ஒரு சிறுவனாக மாறி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.இதை கண்ட அகத்தியர் அந்த சிறுவனை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கோபத்துடன் கேட்டார்.இதற்க்கு அந்த சிறுவன் நீர் எதற்காக இந்த ஆற்றை உங்கள் கமண்டலத்தில் அடைத்து வைத்தீர்கள் என்று எதிர் கேள்வி கேட்டார்.அதற்க்கு அகத்தியர் அது என் சொந்த பிரச்சனை என்று சொன்னார்.அதற்க்கு அந்த சிறுவன் ஆற்றை விடுவித்தது பொது பிரச்சனை என்று பதில் சொன்னார்.மிகுந்த கோபமுற்ற அகத்தியர் அந்த சிறுவனை குட்ட முயன்றார்,உடனே விநாயகர் தன் சொந்த உருவத்திற்க்கு மாறினார்.உடனே அகத்தியர் மிகுந்த கலக்கமுற்று "ஐயனே என்ன விளையாட்டு இது"என்று கேட்க,விநாயகர் ஏன் குட்டவில்லை என்று கேட்டார்.


அதற்க்கு அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டு மன்னிக்க வேண்டினார்.அது மட்டும் இல்லாமல் தவறு செய்யும் அனைவரும் இனி உம்மிடம் வந்து மனமுவந்து வேண்டி குட்டு போட்டுகொண்டால் அவர்கள் பாவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.விநாயகரும் அப்படியே அருள் புரிந்தார்.

நாரதர் அங்கு வந்து பொன்னி தன் தவறை உணர்ந்துவிட்டாள்,இன்று முதல் அவள் வேறு பெயர் பெற்று அழைக்க பட வேண்டும் என்று கூறி அகத்தியரை வேறு பெயர் வைக்குமாறு கேட்டுகொண்டார்.உடனே அகத்தியர்,விநாயகர் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டு பொன்னியை விரிந்தோடச்செய்த்ததால் இன்று முதல் பொன்னி காவிரி என்று அழைக்கப்படுவாள் என்று அருள் புரிந்தார்.பொன்னியும் அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு,என்னை பற்றி ஒரு பாடல் பாடுங்கள் சாமி என்று தாழ்மையுடன் கேட்க,அகத்தியர் அழகாக காவிரியை பாடி அங்கிருந்து சென்றார்...

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லுங்கள்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

Monday, August 29, 2011

அடியாள் - ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...

படித்ததில் பிடித்தது-PART-1
நண்பர்களே நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு,படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

அடியாள்-ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...
எழுத்தாளர்-ஜோதி நரசிம்மன்.
பதிப்பாளர்-கிழக்கு பதிப்பகம்.
விலை-70/-Rs

இரு முறை சிறை சென்று மீண்டவரின் உலுக்கியெடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.அடியாள் கூட்டம்,சிறை அதிகாரிகள்,காவல் துறையினர்,கைதிகள் இவர்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப்போகிறது எச்சரிக்கை.இந்த புத்தகத்தின் அட்டை பக்கத்தில் அச்சிடப்பட்ட வரிகள் இவை."ஆம் உண்மைதான்" இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

விழுப்புரத்தில் தொடங்கும் கதை மெல்ல நகர்ந்து,நிறைய ஊர்களை சுற்றி இறுதியில் ஒரு நல்ல சமுதாயக் கருத்தோடு முடிகிற உருக்கமான உண்மை சம்பவம் தான் இந்த அடியாள்.தனி மனிதன் நல்லவன்,கும்பல் மோசமானது.ரௌடிசத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நம் ஹீரோ அப்படி ஒரு கும்பலில் சேருகிறார்.சண்டை,கட்டப்பஞ்சாயத்து இப்படி பலவற்றை செய்யும் நம் ஹீரோ சிறை செல்கிறார் ஒருமுறை அல்ல இரு முறை.முதல் முறை அடியாளாக.இரண்டாவது முறை ஏன் என்பதை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்துகொள்ளுங்கள்.முதல் முறை சென்றதற்க்கும்,இரண்டாம் முறை சென்றதற்க்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.எவ்வளவு மாற்றங்கள் என்பதையும்,அங்கு அவர் படும் கஷ்டங்கள்,அவர் மட்டுமல்ல பொதுவாக சிறை செல்லும் அனைவரும் உள்ளே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்?.உண்மையில் சிறை என்பது என்ன?.அங்கு நடக்கும் தகிடு தத்தங்கள்,குற்றங்கள்,தான் சந்திக்கும் சில நல்ல உள்ளங்களின் கதைகள் இப்படி அனைத்தைப் பற்றியும் மிகத்துணிவுடனும்,தெளிவுடனும்,எதையும்,யாரை பற்றியும் கவலைபடாமல் போட்டு உடைதிருக்கிறார் நம் ஹீரோ ஜோதி நரசிம்மன்.

கடலூர் மற்றும் புழல் சிறைகளை பற்றியும்,லாக்கப்பிற்க்கும்,ஜெயிலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதையும்,சிறையில் எத்தனை வகைகள் உள்ளது எனவும் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்.உள்ளே செல்லும் அனைவரையும் நிர்வாணப்படுத்தியே அடையாளங்களை குறித்துகொள்கிறார்கள்.அரைஞான் கயிறு கூட இல்லாமல் தான் உள்ளே அனுப்புகிறார்கள்.சிறையில் குழுவாக இருந்தால் தான் மதிப்பார்களாம்,தனியாக இருந்தால் மிரட்டப்படுவார்களாம்.குவாரண்டீ,இது 40 பேர் தங்கும் ஒரு அறை.இது மிகச்சிறிய அறை ஆனால் இதில் 40 பேர் தங்கவேண்டும்.கழிப்பறைகள் இங்கே தனித்தனியாக நம் வீட்டில் இருப்பது போல் இருக்காதாம்.இந்த அறையின் உள்ளேயே தான் கழிப்பறையும்,ஒரு மூலையில் 2 அடிக்கு 2 அடி அளவில் ஒரே ஒரு சிறிய தடுப்புசுவர் தான்.இது தான் சிறையின் உள்ளே இருக்கும் கழிப்பறை.பக்கதிலேயே 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி,காலையிலும்,மாலையிலும் மட்டுமே தண்ணீர் வருமாம்.இது தான் இந்த 40 பேருக்கும்.பெரும்பாலும் தண்ணீர் தொட்டி காலியாகத்தான் இருக்குமாம்.இரவில் சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் தான் செல்வார்களாம்,மூத்திர நாற்றம் குடலைப் புரட்டுமாம்.மாலை 6 மணிக்கு கைதிகளை எண்ணி சிறையில் அடைப்பார்கள்.அப்படி எண்ணப்படும் போது யாராவது இல்லை என்றால் அந்த அறையில் இருக்கும் மற்றவர்கள் நிலைமை அவ்வளவுதானாம்.உங்களுக்கு அவரைப் பற்றி தெரியவில்லை என்றாலும் நீங்கள் நைய்யப் புடையப்படுவது உறுதி.மறுநாள் காலை 6 மணிக்கு தான் மீண்டும் திறந்து விடுவார்களாம்.இந்த 12 மணி நேர தனிமைதான் கைதிகளை துவட்டியெடுக்கும் மிகப் பெரிய தண்டனை.சிறையின் உள்ளே கடிகாரம் கிடையாதாம்.ஒருமணிநேரத்த்றிக்கு ஒரு முறை மணி அடிப்பர்களாம் அதை வைத்து தான் நேரத்தை கணித்துக்கொள்ளவேண்டுமாம்.காலை 7 மணிக்கு மணி அடித்தவுடன் போய் வரிசையில் நிற்க்கவேண்டுமாம்.கஞ்சி தான் காலை உணவு,ஆளுக்கு 1/2 லிட்டர் தான்.அதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது.40 பேர் இருக்கும் அறையில் 30 தட்டுகள் தான்.அப்படியே கிடைத்தாலும் அது எப்படி பட்ட கஞ்சி தெரியுமா புழு பூத்த கஞ்சி.புழு செத்துகிடப்பதெல்லாம் சர்வ சாதாரணமாம்.காய்ந்த மிளகாயை புளியுடன் அரைத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைத்திருப்பார்களாம்,இதை தான் கஞ்சியின் மேல் ஊற்றி சாப்பிட வேண்டுமாம்.காலையில் பூரி,இட்லி,தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த புழு பூத்த கஞ்சி மிகப்பெரிய தண்டனைதான் இல்லையா.தியாகம் செய்துவிட்டு வந்தாலும்,திருடிவிட்டு வந்தாலும் காலை உணவு இந்த கஞ்சி தான்.மதியம் 12 மணிக்கு மதிய சாப்பாடு.அரைகஞ்சியுடன் வடித்து,வட்டாவில் நிரப்பி அடைத்து வைத்திருக்கும் அந்த சோறு தான் மதிய சாப்பாடு.இதை தான் அச்சி சோறு அல்லது படி சோறு என்பார்கள்.இதற்க்கு சாம்பார்,ரசம் என்று கொடுப்பார்களாம் ஆனால் அது சாம்பாரும் இல்லை,ரசமும் இல்லை.மதியம் கொடுத்த உணவு தான் இரவும்.அதுவும் 5.30 மணிக்கே கொடுத்து முடித்து 6 மணிக்கெல்லாம் உள்ளே அடைத்துவிடுவார்கள்.ஜெயிலுக்குள் பேப்பர் வரும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்,ஆனால் அது முழு பேப்பராக இருக்காது.ஆங்காங்கே கத்தரி போடப்பட்டிருக்கும்.பொது செய்திகள் தவிர வேறு செய்திகள் கைதிகளுக்கு தெரிந்த்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த கத்தரி வேளை. இப்படி கொடுமைகள் இன்னும் ஏராளம்.அவற்றை நீங்கள் இந்த புத்தகத்தை படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிறையினுள் பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே.ஆனால் அவர்களுக்கு நேர்காணலின் போது கொடுக்கப்படும் பணம் கூட முழுவதுமாய் அவர்களிடம் போய் சேர்வதில்லை.சிறைக் காவலர்கள் அதில் கமிஷன் எடுத்துக்கொண்டு மீதியை தான் தருவார்களாம்.ஜெயிலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சோகம்,அழுகை,கஷ்டம் இப்படி ஒவ்வொரு கதைகள்.சிறைக்குள் இருக்கும் தண்டனையை விட உறவினர்களை நேர்காணலில் சந்திப்பது தான் மிகக்கொடுமை.நேர்காணல் நடக்கும் இடம் ஒரு மிகச்சிறிய அறை.ஒரே நேரத்தில் 100 பேர் அந்த அறைக்குள் பேசினால் எப்படி இருக்குமோ,அப்படி தான் இருக்குமாம் அந்த நேர்காணல் அறையும்.கைதிக்கும்,பார்வையாளருக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி,இரண்டு பேருக்கும் இடையே 2 கம்பிவலை,வந்தவரை சரியாக பார்க்க முடியாது,சத்தமாக பேசினால் தான் ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்குமாம்.சிறையில் இருக்கும் வார்டன்கள் கூட அங்கு இருக்கும் ஆயுள் கைதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வருடத்திற்க்கு 15 நாள் லீவு இருக்கிறதாம்.இந்த லீவையும் அவ்வளவு சுலபத்தில் எடுத்துவிட முடியாது.கைதிகளின் வீட்டில் ஏற்படும் மரணங்கள்,முக்கிய உறவினர்கள் திருமணம்,அதிகப்படியான உடல் நலக்குறைவு இதற்காகத்தான் எடுக்க முடியும்.அதுவும் ஒட்டுமொத்தமாக அல்ல,முதலில் 6 நாள்,பிறகு 3,3,3, இப்படித்தான் எடுக்க முடியுமாம்.சிறையின் உள்ளே ரெமிஷன் ஆபிஸ் என்ற ஒரு இடம் உள்ளது இங்கு தான் கைதிகளின் விவரம் அனைத்தும் இருக்கும்.

கைதிகளை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவதை "கமான்" என்று சொல்வார்களாம்.சிறையில் கலகம் செய்பவர்கள்,கோஷம் போடுபவர்கள்,உரிமைகள் கேட்டு போராட்டம் செய்பவர்கள் இவர்களைத்தான் கமான் செய்வார்களாம்.வேறு சிறைக்கு மாறுவதன் மூலம் புதிய இடம்,பழகாத கைதிகள் ஆகியவற்றால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்.அதற்க்குத்தான் இந்த இடமாற்றம்.சிறையில் இப்போது தான் அசைவம் எல்லாம் தருகிறார்கள்,ஆனால் நம் ஹீரோ ஜோதி இருந்த போதோ பெருச்சாலி தான் அசைவ உணவாம்.ஆம் பெருச்சாலியை பிடித்து அதன் மேல் மஞ்சல் பூசி அதை பொறித்து சாப்பிடுவார்களாம்.இது கூட எப்போதாவது தான் கிடைக்குமாம்.சிறையில் 15 நாளுக்கு ஒருமுறை திரைப்படம் காட்டுவார்களாம்.

பிரேமானந்தா,ஜான் டேவிட்,டாக்டர் பிரகாஷ்,பாக்ஸர் வடிவேலு,பழநெடுமாரன்,வைகோ இப்படி பல பிரபலங்களையும் அவர்கள் சிறையில் எப்படி இருப்பார்கள்,இருந்தார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் சொல்லியிருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த நம் ஹீரோ ஜோதி என்ன ஆகிறார்,எதற்காக இரண்டாவது முறை சிறை செல்கிறார்.அங்கு அவருக்கு இந்த முறை கிடைக்கும் மரியாதை என்ன?.தன் வாழ்க்கையின் முதல் பகுதியை கொடூரமான விதத்தில் கழித்த நம் ஜோதி இரண்டாம் பகுதியை எப்படி வாழ்கிறார் என்பதை படித்துப்பாருங்கள்.முதல் முறையை விட இரண்டாவது முறை சிறை பல மாற்றங்களை அடைந்திருந்தது.இப்போது சிறையில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவாம்,முறைகேடாக எந்த வசதியையும் பெறலாமாம்.சிறைக்குள் செல்போன் உபயோகப்படுத்துகிறார்களே,அது எப்படி இவ்வளவு கெடு பிடிகளையும்,காவலையும் மீறி உள்ளே செல்கிறது என்பதை அறிந்துகொண்டால் மிரண்டு போய்விடுவீர்கள்.நானும் அப்படித்தான் மிரண்டுபோனேன்.
மனிதர்கள் குற்றம் செய்வதற்கான அடிப்படை என்ன?எந்த சூழ்நிலை அவர்களை குற்றவாளியாக்குகிறது.இப்படி பல கேள்விக்களுக்கான பதில்களும் இந்த புத்தகத்தில் உள்ளது.

புத்தகதை படித்து முடிந்த பிறகு பின் இணைப்புகள் வேறு கொடுத்திருக்கிறார் ஜோதி.கைது செய்யப்படுகையில் என்னென்ன நடக்கப்பட வேண்டும்,போலீஸ் காரர்கள் எப்படி நடக்கவேண்டும் என்றும்.சிறையின் உள்ளே கைதிகளின் உரிமைகள் என்னென்ன.எதற்கெல்லாம் அவர்கள் போராடலாம் என்றெல்லாம் தெளிவாகவும்,புரியும்படியும் சொல்லியிருக்கிறார்.கைதிகளை நேர்காணும் மனு,முதல் தகவல் அறிக்கை இவற்றின் மாதிரிகளையும் இணைத்திருக்கிறார்.

நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தனியொரு உலகம் அது.சிறைச்சாலை பற்றி திரைப்படங்கள் பதிவு செய்திருக்கும் பிம்பங்கள் அனைத்தும் போலியானவை.நிஜ சிறைச்சாலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி என்கவுண்டர் செய்துவிடுவார்கள்.அவர்களை பொறுத்த வரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு "யூஸ் அண்ட் த்ரோ" பொருள்.
இந்த புத்தகதின் கடைசியில் குறிப்பிடப்பட்ட வரிகள் இவை.நிச்சயம் இந்த புத்தகம் விரைவில் ஒரு திரைப்படமாக வெளிவரும்.பொருத்தமான நடிகர்,இயக்குனர் என்று நல்ல குழுவுடன் வந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத திரைப்படமாக அது அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் இந்த அடியாள் - ஒரு கைதியின் டைரி...

Monday, August 15, 2011

சுதந்திரம் - அடைந்துவிட்டோமா?.


நண்பர்களே இதுவரை நான் தொடர்ந்து ப்ளாக் எழுதவில்லை.இதுவரை 4 பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்.ஆனால் இனி தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.அதன் தொடக்கமாக இந்த புனிதமான நாளில் என் ஆதகங்த்தையும்,நம் தவறுகளையும் திருத்திக்கொள்ள என்னுடய சிறு Requestஐ உங்கள் முன் வைக்கிறேன்.

சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகிவிட்டது.மனதை தொட்டு சொல்லுங்கள் நாம் முழு சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா?எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,தீவிரவாதம்,மெகா ஊழல்கள்,வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி, இன்னும் எத்தனையோ விஷயங்கள் தலைவிரித்து தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் வருடா வருடம் தில்லியிலும் சரி,நம் தமிழகத்திலும் சரி தலைவர்கள் கொடியேற்றி அறிக்கை விட்டு விட்டு அடுத்த வேலைக்கு (பழிவாங்க,மக்கள் பணத்தை சுரண்ட) தயாராகிவிடுகின்றனர்.இது நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி கடைகோடி வரை நடக்கிறது.

ஓட்டு போடவில்லை என்றால் 6 மாதம் தண்டனை,
ஓட்டு போட்டால் 5 வருடம் தண்டனை.சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை.

உண்மையில் நாம் முழு சுதந்திரம் அடைந்து விட்டோமா?.நம் முன்னோர்கள் வெள்ளையனிடமிருந்து அடிபட்டு,உதைபட்டு,குண்டடி பட்டு தங்கள் விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டது இதற்க்கு தானா?.சுதந்திரம் தரப்பட்டதல்ல,அவர்கள் தியாகத்தால் பெறப்பட்டது.வெள்ளையனிடமே அடிமையாய் இருந்திருந்தாலும் நன்றாகதான் இருந்திருப்போமே என்று என்னதோன்றுகிறதல்லவா.அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருந்திருக்கும்.இளைஞர்கள் கையில் இந்தியாவாம்,ஆனால் இன்று நாம் தான் அழிவுப்பாதையில் wheeling செய்து கொண்டு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.பாவம் நம் இளைஞர்களின் Hero என்று அழைக்கப்படும் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம்,இந்தியா வல்லரசாகிவிடுமென்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்.எனக்கு பகத்சிங்கும்,சுபாஷ் சந்திரபோஸும் ரொம்ப பிடிக்கும்.

பகத்சிங் அவர் பார்வையில் சுதந்திரம் என்ன என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்,அந்த வரிகள் இதோ,
பாலுக்காக அழும் குழந்தை,
கல்விகாக ஏங்கும் சிறுவன்,
வேலைகாக அலையும் இளைஞன்,
வறுமையில் வாடும் தாய்,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா...

இன்று நாம் என்ன நடந்தாலும்,அதை பற்றி கவலைபடாமல் தான் உண்டு,தன் வேலை உண்டு என்று அவரவர் வேலையில் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது,அந்த பிணத்தில் இருந்து வரும் துற்நாற்றத்தை வைத்தே தெரிந்துகொள்கிறோம் (இன்று பட்டிமன்றத்தில் ராஜா சொன்னது).இப்படி எது நடந்தாலும் அதை அடுத்த சில நாட்களிலேயே மறந்து விட்டு மறுபடியும் அவரவர் வேலையில் இறங்கிவிடுகிறோம்.இதை பற்றி நம் சுபாஷ் சந்திரபோஸ் அழகாக சொல்லி இருப்பார்.
உலகிலேயே மிகப்பெரிய குற்றம் அநீதிகளையும்,தவறுகளையும் சமரசம் செய்துகொள்வது.

இப்படி இவற்றை யாராவது ஒருவன் எங்காவது தட்டி கேட்டால் அவனை அன்னியன்,அம்மாஞ்சி,பைத்தியக்காரன் என்று சொல்லுகிறோம்.ஒரளவுக்கு மேல் போனால் அவனை தீவிரவாதி என்று பட்டம் கட்டி போட்டு தள்ளிவிடுகிறோம்.அதர்மம் தலை தூக்கும் போது கடவுள் நேராக வருவதில்லை இது போன்ற அன்னியங்களாகவும்,அம்மாஞ்சிகளாகவும்,பைத்தியக்காரர்களாகவும் தான் வருவார்.இதை உணர்வோம்.ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டாலே போதும் நல்லவை தானாகவே நடக்கும்.நாடும் செழிக்கும்.இது Advise அல்ல Request.

பெற்ற சுதந்திரத்தையும், பெறுவதற்க்கு பட்ட கஷ்டங்களையும் உணர்வோம், ஒழுக்கத்துடன் இருந்து உயர்வோம், நாடும் உயரும். ஜெய்ஹிந்த்...

Tuesday, March 1, 2011

யுத்தம் செய் - விமர்சனமும்,அலசலும்


படத்தை பற்றி ப்ளாக் உலகின் பலரும் நிறைய எழுதி விட்டார்கள்,இருந்தாலும் நானும் எழுதுகிறேன்.இது கொஞ்சம் லேட் தான் இருதாலும் எழுதுகிறேன்,ஏனென்றால் என்னை சார்ந்த பலர் ப்ளாக் உலகிற்கு செல்வதில்லை.என் மூலமாக அவர்கள் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,மறக்காமல் பார்க்க வேண்டும் என்பதற்காகவும்,இந்த படம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்க்காகவும்,இப்படி ஒரு படத்தை உருவாக்கிய இந்த டீமை வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்,நானும் அவர்களை புகழ வேண்டும் என்பதற்க்காகவும்,நான் பாராட்டுவது அந்த டீமுக்கு தெரியப்போவதில்லை என்றாலும்,நல்ல படைப்புகளையும்,படைப்பாளிகளையும் நிச்சயம் பாராட்டவேண்டும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.பொதுவாக நான் அதிகம் ப்ளாக் எழுதுவதில்லை.எனக்கு மிகவும் பிடித்து,என்னை பாதித்தால் மட்டுமே அந்த படத்தை பற்றி எழுதுவேன்.அந்த வரிசையில் அங்காடித்தெருவுக்கு பிறகு யுத்தம் செய்...

அப்படி என்ன கதை படத்தில்,த்ரில்லர் தான்.ஆனால் தமிழ் சினிமா இதுவரை தொடாத கதை,தொட பயப்படும் கதை.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஏதோ சில உடல்களுக்கு சொந்தமான முழங் கைகள் துண்டாக வெட்டப்பட்டு ஒரே மாதிரியான கவர்களில் பேக் செய்து,ஒரே மாதிரியான அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீசப்படுகின்றன. இது தொடர்ந்து பல முறை நடக்கிறது.சென்னை போலீஸ் மிரண்டு போகிறார்கள்.இந்த கேஸ் CBCID இன்ஸ்பெக்டரும்,தன் தங்கையை தொலைத்து விட்டு அவளை தேடிக்கொண்டிருக்கும் அண்ணனான சேரனிடம் ஒப்படைக்கபடுகிறது,இவை ஒருபுறம் இருக்க மறுபுறம் சில கொலைகள் அரங்கேறுகிறது,பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள் என்று கதை சூடு பறக்க ஆரம்பிகிறது.கைகள் வெட்டப்படுபவர்கள் யார்?ஏன் கைகள் வெட்டப்படுகிறது?யார் வெட்டுகிறார்கள்?கொலை செய்யப்படுபவர்கள் யார்?ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?யார் கொலைசெய்கிறார்கள்?ஏன் பெண்கள் கடத்தப்படுகிறார்கள்?யார் கடத்துகிறார்கள்? இப்படி கதையில் பல முடிச்சுகள் விழுந்து கொண்டே இருகின்றன.இப்படி விழும் முடிச்சுகளை எப்படி அற்புதமாக அவிழ்க்கிறார் CBCID இன்ஸ்பெக்டர் சேரன்?.என்ன ஆனது?ஏன் இப்படி நடக்கிறது?முடிவு என்ன என்று சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கே சென்று புலனாய்வு செய்து (Investigation) முடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.முதலில் இப்படி ஒரு கதையை தைரியமாக எடுத்ததற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதோடு நிற்காமல் அதை மிகவும் திறம் பட திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து படத்துடன் ஒன்றி நம்மையும் Investigation செய்ய வைத்திருப்பது மிஷ்கின்னின் தனித் திறமை.படம் பார்க்காதவர்கள் சீக்கிரம் தேட்டர் சென்று பாருங்கள்...
சரி இனி படத்தை பற்றியும் படத்தின் கதாபாத்திரங்களை பற்றியும் ஒரு சிறு அலசல்...


திருமதி லக்ஷ்மி:
படத்தின் முக்கிய கதாபதிரங்களில் இவர் மிக முக்கியமானவர்.முதலில் இந்த கதாபாத்திரதிற்க்கு மிக பிரபலமான நடிகை ஒருவரை அணுகி இருக்கிறார் மிஷ்கின்.ஆனால் அவர் மொட்டை அடிப்பதக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் லக்ஷ்மி மேடமை தேர்வு செய்திருக்கிறார்.சும்மா சொல்ல கூடாது,லக்ஷ்மி மேடம் வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.அன்னபூரணி என்ற அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.முதலில் மொட்டை அடித்ததர்க்கே அவருக்கு ஒரு தனி விருது கொடுக்க வேண்டும்.இன்று பல ஆண்களே மொட்டை அடித்து கொள்ள தயங்கும் நேரத்தில் அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு காதலித்திருந்தால் மொட்டை அடிக்க ஒத்து கொண்டிருப்பார்.குறிப்பாக அவர்களுடைய மகள் இறந்ததை பார்த்த உடன் அவர் உறைந்து போய் கீழே விழும் காட்சி,தன் மகன் கீழே விழுந்து கிடக்கும் பொது Y.G வண்டியை நிறுத்த சொல்லியும் நிற்காமல் செல்லும் காட்சி,மொட்டை அடித்துக்கொண்டு ஒருவனை சின்னா பின்னமாக வெட்டும் காட்சி,இன்ஸ்பெக்டர் எசக்கி முத்துவை தலையில் வெட்டி கொல்லும் காட்சி,இறுதியில் அவ்வளவு க்ரூரத்தயும் மறந்து அந்த பெண்ணை பார்த்து சுஜா சுஜா என்று அழும் காட்சி,என் மகளை விட்டுடு டா என்று செல்வா விடம் கெஞ்சும் காட்சி,இறுதியில் அவருக்கு ஏற்படும் முடிவு,இப்படி பல இடங்களில் அரங்கம் அதிர கைதட்டல்களையும்,கண்களை குளமாக்கும்படியும் நடித்திருக்கிறார்.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கண்டிப்பாக இவருக்கு தான்.இந்த படம் இவரின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான மறக்க முடியாத படம்.படம் முடிந்து வெளியில் வந்தவுடன் கண்களை மூடினால் என் கண்களில் நின்ற இரண்டு பேரில் இவரும் ஒருவர்.இன்னொருவர் அவரை பற்றித்தான் அடுத்தது.

ஜெயப்பிரகாஷ்:
முதலில் இவர் ஒரு நல்ல தயாரிப்பாளர்.ஆனால் இவரில் ஒளிந்து கொண்டிருந்த மிக சிறந்த நடிகனை வெளியில் கொண்டு வந்த சேரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.மனிதர் யூதாஸ் இஸ்காரியோத் என்ற வித்யாசமான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.இந்த பெயர் ஏன் என்று நானும் யோசித்தேன் ஆனால் இறுதியில் இந்த பெயர் வைக்க பட்டதற்கான அர்த்தம் தெரிந்தவுடன் அரங்கம் அதிர்கிறது அனைவரின் கைதட்டல்களால்.இதுவரை தான் செய்த அனைத்து கதாபாதிரங்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.அந்த பயங்கரமான இடத்தில அவரை காண்பிக்கும் முதல் காட்சியிலேயே அசால்டாக தூங்கிக்கொண்டு அசத்தியிருக்கிறார்.ஒரு நிஜ Archaeologist ஆகா வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் சேரனிடம் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் அரங்கம் அதிர கைதட்டல் வாங்குகிறார்.அந்த கடைசி சீனில் எதை சொல்லவதென்றே தெரியவில்லை அனைத்து வசனங்களுமே அபாரம்.அதை பேசும் விதம் அதை விட சூப்பர்.அந்த குண்டடி பட்டு தான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி அதற்க்கான விளக்கத்தை சொல்லும் வசனம் இதுவரை எவரும் செய்ததில்லை,அவ்வளவு detailed சீன் அது.இறுதியில் அவர் நம்மை பார்த்து கேட்கும் கேள்வி,ஐயோ என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகர் இவர் தான்,அதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஒளிப்பதிவாளர் சத்யா:
இவர் தொழில் கற்ற இடம் இவரின் உழைப்பில் தெளிவாக தெரிகிறது.ஆம் இவர் P.C இன் அசிஸ்டென்ட் என்பது பலருக்கு தெரியும் என்று நினைகிறேன்.படத்தின் முதல் காட்சியான அந்த மழை பெய்யும் காட்சியிலேயே அசத்திவிட்டார்.ஒரு சில இடங்களை உற்று காண்பித்து விட்டு பிறகு மெதுவாக கேமராவை நகர்த்துவது,அட்டை பெட்டிகளை டாப் ஆங்கிளிலிருந்து காட்டுவது,குறிப்பாக அந்த இண்டர்வல் பிளாக் சண்டை காட்சி.இறுதிக்காட்சியில் அந்த பையன் படிக்கட்டுகளில் மேல்நோக்கி செல்வதும்,பக்கத்தில் அம்புக்குறிகள் அவன் வெளிச்சத்தை நோக்கி செல்கிறான் என்று சூசகமாக காட்டப்படுவதும் மிக அருமை.இப்படி பல இடங்களில் மிரட்டிருக்கிறார்.படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தன் கேமராவால் செதுக்கியிருக்கிறார்.படத்தை தாங்குகின்ற தூண்களில் இவரும் முக்கியமானவர்.படத்தின் இறுதிக்காட்சியில் மகேஷ் முத்துசுவாமி என்று மிஸ்கினின் ஆஸ்தான கேமராமேனின் பெயரை சொல்லி அவரையும் நினைபடுத்துவது இருவருக்கும் உள்ள நல்ல நடப்பை காட்டுகிறது.தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த கேமராமேன் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

எடிட்டர் காகின்:
ஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை இவருடைய வேலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.கனக்கச்சிதமாக தன் வேலையை செய்திருக்கிறார்.சூப்பர் காகின்...

இசையமைப்பாளர் கே:
பெயரிலேயே வித்யாசம்,இசையிலும் அப்படித்தான்.வசனம் இல்லாத இடங்களில் அவர் இசை பேசுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.த்ரில்லர் படத்திற்கே உண்டான மிரட்டல் இசை.இளையராஜா சாரைப் போல வயலினாலேயே மிரட்டிருக்கிறார்.இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.கன்னிதீவு பொண்ணா பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் என்னபதில் சந்தேகமே வேண்டாம்.M.L.R கார்த்திகேயனும்,ராகிப் ஆலம் அவர்களும் மிக அருமையாக இந்த பாடலை பாடி ரசிக்க வைத்து ஆட்டம் போட வைக்கிறார்கள்.ஒரு சின்ன குறை இந்த பாடலில் அமீருக்கு பதில் வேறு யாரையாவது ஆட வைத்திருக்காலம்.இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் கே.இவரும் சத்யாவும் மிஷ்கினின் வலது இடது கரங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தயாரிப்பாளர்கள் AGS :
வர வர இவர்களும் மிகச்சிறந்த படங்களையே தேர்வு செய்து தயாரிக்கிறார்கள்,மைனா என்ற அருமையான படைப்பிற்கு பிறகு மற்றுமொரு வித்யாசமான தமிழ் சினிமா மறக்க முடியாத சூப்பர் படம்.இவர்களும் ஐயங்காரன் போல் ஆகிவருகிறார்கள்,அடுத்த படைப்புகளும் எதிர் பார்க்க வைக்கும் அருமையான படைப்புகளே (அவன் இவன்,மாற்றான்).காத்திருப்போம்.நல்ல தயாரிப்பாளர்கள்.வாழ்த்துக்கள்.

சேரன்:
இதுவரை நாம் பார்த்திராத சேரன்,அவர் ஏற்று நடித்த கதாபாதிரங்களிலேயே மிகச் சிறந்தது இது தான்.J.K என்ற அந்த கேரட்டராகவே வாழ்ந்திருக்கிறார் சேரன்.கோபமும்,தங்கையை காணவில்லையே என்ற வலியும் நிறைந்த முகத்துடன் படம் முழுவதும் முகத்தில் ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல் வந்து கலக்கிருகிறார்.பொதுவாக இப்படி பட்ட கதையில் சேரன் போன்ற ஹீரோவை தேர்வு செய்ய யாராக இருந்தாலும் தயங்குவார்கள்.ஆனால் மிஷ்கின் தான் தேர்வு செய்தால் சரியாக தான் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.சேரனும் அந்த சீரியஸ்நஸ் தெரிந்து உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார்.நிறைய இடங்கள் இருக்கிறது சேரனுடைய நடிப்பை சொல்ல.அவருடைய அசிஸ்டன்ட்ஸ் 2 பேருடைய profileகளை குப்பை தொட்டியில் போடும் காட்சி,Interval சண்டை காட்சி இன்னும் இப்படி பல காட்சிகளில் சேரன் கைத்தட்டல்களை பெருகிறார்.சேரனுடைய நடிப்பு வரலாற்றில் இது ஒரு மையில் கல்.

மிஷ்கின்:
தமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவர்.நந்தலாலா என்ன ஒரு மென்மையான படம் அதற்க்கு பிறகு இப்படி ஒரு மிரட்டலான த்ரில்லர்.முழுவதும் மாறுபட்ட களத்தை கையில் எடுத்து வெற்றி பெற்று அசைத்திருக்கிறார்.இது மிஸ்கினின் படம் என்று படத்தை பார்க்கும் என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும்,ஆனால் புதியவர்களுக்கு புதுமையாகவே இருக்கும்.படத்தில் துவக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் மிஷ்கின்னின் பெயர் இடம் பெறவில்லை,அது ஏன் என்று தெரியவில்லை.அவருடைய ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் போதே தெளிவாக தெரியும் என்பதாலோ என்னவோ.இந்த படம் மிஷ்கினை இன்னும் ஒரு படி மேலே தூக்கி வைத்திருக்கிறது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிற்து.மிஷ்கின் எல்லோரையும் நன்றாக bend எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Y.G சார் கலக்கியிருக்கிறார்,நெடு நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரைக்கு வந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் அதே Y.G தான்.ஒரு பெண் குழந்தையை கொடுமையான விதத்தில் பறிகொடுத்த ஒரு உண்மையான தந்தையின் வலியை கண்முன் நிறுத்துகிறார்.குறிப்பாக கோபமும்,வெறியும் கலந்த வலியுடன் அவர் சுஜா என்று கத்துவதும், இறுதிக்காட்சியில் தன் மனைவியை தூக்கிவிட்டு போய் நம் கடமையை செய் என்று சொல்லாமல் சொல்லும் காட்சிளும் OLD IS GOLD என்று நிரூபித்திருக்கிறார்.செல்வா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,சேரனின் தங்கையிடம் நான் ஒரு போலீஸ் காரன் இன்னொரு போலீஸ் காரனிடம் தோற்க்க மாட்டேன் என்று அவர் பேசும் காட்சி பயம் கலந்த நம்பிக்கை.நெடு நாள் கழித்து வந்தாலும் நல்ல ஒரு Re -entry.இந்த படத்தில் Y.G யும்,செல்வாவும்,அஞ்சாதேவில் பாண்டியராஜன்.இப்படி திறமையான தங்கங்களை தேடிபிடித்து தூசு தட்டி பட்டை தீட்டியிருக்கும் மிஷ்கினுக்கு Hats off.மாணிக்கவிநாயகம் சார், இவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.நமக்கே இவரை எதிரில் பார்த்தால் அடிக்க வேண்டும் போல் தோன்றும் அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.இவர்கள் மட்டும் அல்ல இன்ஸ்பெக்டர் எசக்கி முத்து,Y.G சார்,லக்ஷ்மி மேடம் இவர்களின் மகன்,கிட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், பிணத்தை பார்த்ததில் உறைந்து போய் கிடக்கும் சிறுவன்,பிணஅறை ஊழியர்,சப்வே காட்சியில் அந்த கைகளை பார்த்து அழும் அந்த அம்மா,சேரனின் அசிஸ்டன்ட்ஸ்,சேரனின் உயர்அதிகாரி, கமிஷனர்,இன்னும் படத்தில் பங்கு பெற்ற அனைவரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இன்றி இன்னும் படத்திற்கு பின்புறம் இருந்து பாடுபட்ட அமரன்,Action பிரகாஷ்,வெங்கட் மாணிக்கம்,ஜோயல் பென்னெட்,சுரேஷ்,ஹக்கிம்,உதயகுமார்,ஹரிஷங்கர்,நிகில்,Assistant directors,லைட் பாய்ஸ்,Production assistants இன்னும் நான் எழுத மறந்த அனைவருமே தங்களது உழைப்பை கொட்டி இருக்கிறார்கள்.இவர்களுக்கும் நான் மேற்கூறிய அனைவருக்கும் வாய் வலிக்கும் வரை வாழ்த்துக்களும்,கைவலிக்கும் வரை கைதட்டல்களும்.

படம் புரியவில்லை என்பதெல்லாம் சுத்த பேத்தல், நமக்காக தான் 200,300௦௦ நாட்கள் கஷ்டப்பட்டு படம் செய்கிறார்கள் இயக்குனரும் அவருடைய டீமும்,அவர்களுக்காக ஒரு 2 மணிநேரம் நம்மமுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு,எதை பற்றியும் சிந்திக்காமல்,படத்தோடு ஒன்றி பார்த்தால் நிச்சயம் படம் நன்றாக புரியும்.இதை நான் சொல்லவில்லை மிஷ்கினே சொன்னது.தமிழ் சினிமா வரலாற்றில் த்ரில்லர் என்று எடுத்தால் அதில் முதல் 5 இடங்களுக்குள் இந்த படம் நிச்சயம் இருக்கும்.சிகப்பு ரோஜாக்காளுக்கு பிறகு ஒரு நல்ல த்ரில்லர் படம்.எது எப்படியோ தமிழ் சினிமா கொண்டாடப்படவேண்டிய படம் இது.

யுத்தம் செய் - இம்சை செய் அநீதிக்கெதிராக...

Friday, April 2, 2010

அங்காடித் தெரு


Cast :Magesh, Anjali
Direction :Vasantha Balan
Production :K.Karuna moorthi,C.Arun Pandiyan
Music :GV Prakash Kumar, Vijay Antony.


தாங்க முடியாத வலிகளை தன் குடும்பமுன்னேற்றத்திற்காக வசந்தங்களாக ஏற்றுகொண்டு இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்,நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களின் இயல்பானவாழ்க்கையை சிறிதும் பிழை இல்லாமல்அப்படியே சொல்லியிருக்கும் அற்புதமானபடம்.இல்லை இல்லை வரலாறு.
நெடுநாள் கழித்து தமிழ் சினிமாவில்வெளிவந்துள்ள மிக சிறந்த அற்புதமான காதல்கவிதை.தமிழ் சினிமா அவ்வப்போது உயிர்பெறுகிறதென்றால் அது இப்படிப்பட்ட படங்கள்மூலம் தான் என்று சொன்னால் மிகைஆகாது.

பள்ளியிலேயே முதல் மாணவனாக வரும் லிங்கு ( மகேஷ்) தன் தந்தையின் அகால மரணத்தின் மூலம் மேற்கொண்டு படிக்க முடியாமல் குடும்ப பாரத்தை தோள் மேல் சுமந்து கொண்டு சென்னை தீ.நகரில் உள்ள மிக பிரபலமான ஒரு ரெடிமேட் ஷோரூமிற்கு வேலைக்கு வருகிறான்.ஏற்கனவே அங்கு வேலைபார்க்கும்
கனியுடன் (அஞ்சலி) அடிக்கடி சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.இந்த சண்டை நாளடைவில் காதலாக மலர்கிறது.இந்த காதலை வேரோடு அறுக்க சில கருங்காலிகள் கையில் ஆயுதங்களுடன் அலைகிறார்கள்.இவர்கள் எண்ணம் நிறைவேறியத காதலர்கள் இணைந்தார்களா,பிரிந்தார்கள என்பதை அழுத்தமாகவும்,ஆணித்தனமாகவும்,அற்புதமாகவும்,அழகாகவும் பதிவுசெய்திருக்கிறார் வசந்தபாலன்.
படம் பார்க்காதவர்கள் தேட்டர் சென்று பாருங்கள்.பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் சென்றுபாருங்கள்.


குடும்ப வறுமையினாலும்,சூழ்நிலையாலும் கிராமத்திலிருந்து ரெடிமேட் ஷோரூமுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களும்.இளம் பெண்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வேலை செய்கிறார்கள்.இந்த வேலைக்காக எதையெல்லாம் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் ஆணியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் துவக்க காட்சியில் வரும் விடுதியும்,சாப்பிடும் இடமும்,அவர்கள் குளிக்கும் இடத்தையும் பார்க்கும் போது நமக்கே ஒரு அருவருப்பபையும்,கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விடுகிறது.இது எல்லாம் உண்மைதானா என்று நாமே நம்மை கேட்டுகொள்ளாவும் செய்கிறது.என்னடா இது ஒரு அழுகாச்சி நிறைந்த ஒரு சோகமான படமோ என்று நினைக்க தோன்றிய சில நிமிடங்களிலேயே,இவை எல்லாவற்றையும் மீறி இறுதியாக நம்மை அந்த (டை)தைக்குள் பின்னிபினைய வைத்திருப்பது திரைக்கதையின் பலம்.

சரி நான் படத்தை பற்றியும் அதற்க்கு உயிர் தந்தவர்களை பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை படுகிறேன்.முதலில் இந்த வரலாற்றை உருவாக்கிய காவியத் தலைவன் பற்றி.

வசந்தபாலன்:

இந்தியாவின் மிக சிறந்த 10 இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.படம் துவங்கிய 20 நிமிடங்களுக்குள்ளாகவே அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் இடம் துவங்கி படத்தின் இறுதி காட்சியில் கனி ''என்னங்க வீட்டுக்குக்கு பணம் அனுப்பனும்னு சொன்னிங்களே அனுப்பியாச்சா''என்று கேட்க்கும் காட்சி வரை அனைத்து இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.குறிப்பாக ரங்கநாதன் தெரு அதை சுற்றி நடக்கும் கதையை அற்புதமாக இயக்கி இருக்கிறார்.படத்தின் உண்மையான கதாநாயகன் ரங்கநாதன் தெரு தான்.இப்படி ஒரு கதை களத்தை கையில் எடுப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும் தான்.ஒரே இடத்தை காண்பிக்கிறார்களே படம் போர் அடிக்குமோ என்று நான் கூட நினைதேன்.ஆனால் என் கணிப்பு மிகவும் தவறாகிப்போனது படம் மெல்ல மெல்ல நகர தொடங்கிய பிறகு.படத்தின் முதல் காட்சியில் கனியும்,லிங்குவும் கால்களை மிதித்து விளையாடும் விளையாட்டு ஏன் என்றும்,தேவையில்லாதது என்று நினைக்க தோன்றினாலும் இறுதியில் அந்த காட்சி வைக்கபட்ட காரணம் புரிந்தவுடன் நம்மால் பேச முடியவில்லை நம் கண்ணீர்தான் பேசுகிறது.எல்லாவற்றிற்கும் மேல் நடப்பவைகளை யாருக்கும் பயப்படாமல் அப்படியே ஆணியடித்து காண்பித்து கண்கலங்க வைத்து கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.இது போல் பல காட்சிகளில் தன் தனி முத்திரையை பதித்து நான் மிகச்சிறந்த 10 இயக்குனர்களில் ஒருவன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.படத்தில் வரும் அனைவரையும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் பச்சைமரத்தில் ஆணியடித்தது போல மனதில் பதியவைத்து இருப்பது வசந்தபாலனின் தனிச்சிறப்பு.பெயரில் வசந்தத்தை வைத்திருந்தாலும் இவர் வசந்தத்தை விரைவில் பெறவில்லை என்பதே உண்மை.இவரின் ஆல்பம் சரியாக போகாத காரணத்தினால் கிட்டத்தட்ட 1.5 வருடம் தன் ரூமை விட்டு வெளியே வராத அளவுக்கு கூனி குறுகிப் போயிருந்தாராம்.பிறகு வெயில் தந்த வெற்றியில் சற்று இளைபாறிவிட்டு மீண்டும் இதோ ஒரு படத்தின் (அங்காடித்தெரு) கொடுத்து அனைவரையும் பேசமுடியாமல் செய்து விட்டார்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு நிச்சயம் தேசியவிருது உண்டு,ஆனால் எத்தனை என்று தெரியவில்லை.என்னால் உங்களை பாராட்ட முடியுமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது.என்னிடம் பேசுபவர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அங்காடிதெருவை பார்க்கசொல்லி வற்புறுத்துகிறேன்.நான் குறைந்தபட்சம் 50 முறையாவது பார்பேன் திரைஅரங்கில் மட்டுமே.நீங்கள் என் எதிரில் வந்தால் என் தோள் மீது வைத்து கொண்டாடுவேன் உங்கள் எடையை பற்றி கவலைபடாமல். இப்படி ஒரு படத்திற்காக 4 வருடம் என்ன 40 வருடங்களும் காத்து இருக்கலாம் தவறில்லை.ஆனால் என்னை போன்ற உங்களுடைய தீவிர ரசிகர்களுக்காக கொஞ்சம் முடிந்தவரை சீக்கிரமாக எடுங்கள். இவரைப்போல் ஒரு இயக்குனர் நம் மத்தியில் இருப்பதை நினைத்து பெருமைபடவேண்டும்.

தயாரிப்பாளர்கள் :

திரு.அருண்பாண்டியன்,திரு.கருணாமூர்த்தி இவர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.கருணாமூர்த்தி அவர்களின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.
இவர்கள் இல்லையென்றால் இப்படி ஒரு படம் நிச்சயம் வந்திருக்காது.உங்கள்ளுக்கு மிக்க மிக்க என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.அருண் பாண்டியன் சார்,கருணாமூர்த்தி சார்,எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான்.அங்காடித் தெரு போன்ற அற்புதமான கதைகளை வைத்திருக்கிறான்.நீங்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நிச்சயம் சாதிப்பான்.அவனுக்கு ஒரு வெளிச்சம் காட்டுங்கள்,அவன் பல புதிய பாதைகளை காட்டுவான்.

அஞ்சலி :

படத்தின் முக்கிய கதாபாத்திரம்.அஞ்சலி இந்த படத்திற்கு மிக நல்ல தேர்வு.கனியாகவே வாழ்ந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.அவரை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் இந்தளவுக்கு முழுமையாக செய்திருக்க முடியாது.இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கு தான் ஒளித்து வைத்திருந்தாரோ தெரியவில்லை.இந்த படத்தில் அஞ்சலியை இவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.இந்த படத்தில் காட்டியதைப்போல் வேறு எந்த படத்திலும் காட்டவில்லை என்பதே உண்மை Simply Superb.அவருடைய நடிப்பைபற்றி குறிப்பாக ஒரு சில காட்சிகளைசொல்லியே ஆக வேண்டும்.லிங்கு,கருங்காலி கிட்ட கனியை போட்டு கொடுக்கும் காட்சிக்கு பிறகு வரும் வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.இறுதி காட்சியில் தன் கால்கள் இல்லையே என்று கதறும் காட்சி.இனி நாம் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து பார்க்கும் காட்சி.பாடல் காட்சிகளில் முக பாவனைகளை மாறி மாறி காட்டி அசத்தி இருக்கிறார்.இன்னும் எத்தனையோ காட்சிகளை சொல்லலாம் இந்த இடம் பத்தாது.சோகம், காதல் ஏக்கம், அழுகை, இயலமை. அவமானம், என அனைத்து பரிணாமங்களையும் கொட்டி நடித்திருக்கிறார்.கனி நிச்சயம் உங்களுக்கு ஒரு தேசிய விருது உண்டு.அதுவும் அந்த திருநெல்வேலி பாஷை பேசி நடித்திருப்பது மிகவும் பிரமாதம்.அஞ்சலி நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.So இனி வரும் படங்களில் எங்களை ஏமாற்றாதீர்கள் நன்றாக தேர்வுசெயுங்கள்.தமிழ் சினிமா தவரவிடவிருந்த விலை மதிக்கமுடியாத முத்து நீங்கள்.நல்ல வேலை வசந்தபாலன் காப்பாற்றிவிட்டார்.மிக்க நன்றிசார்.

மகேஷ்:

மகேஷ் அருமையான அறிமுகம்.கதாநாயகன் தேடலை நான் விஜய் டிவியில் பார்த்தேன் ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் கொஞ்சம் சிரிப்பாகவும் இருந்தது.லிங்குவாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.கதாநாயகனை தேட 6 மாதங்கள் காத்திருந்ததாக இயக்குனர் சொன்னார் ஒரு பேட்டியில்.இவருக்காக 1 வருடம் காத்திருந்தாலும் தவறில்லை.மிகவும் அழகான அற்புதமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார் லிங்கு.குறிப்பாக சில காட்சிகள்.அந்த குளியலறையின் பக்கத்தில் நின்று கனியிடம் பேசும் காட்சி.கருங்காளியிடம் அடிவாங்கிய பிறகு வரும் காட்சி.இறுதிக் காட்சியில் ''நல்ல யோசிச்சிட்டேன் கனி,வா இப்பவே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்''என்று சொல்லும் காட்சிகளில் கைதட்டல் பெற்று கண்களையும் கலங்க வைக்கிறார்.இப்படியும் ஒரு காதலன் இருக்கிறானே என்று ஆண் வர்கத்தையே பெருமைப்பட வைத்துவிடுகிறார்.உண்மையாகவே சொல்கிறேன் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

விஜய் அந்தோனி & G.V.பிரகாஷ்:

இவர்கள் இருவரை பற்றி நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.படத்திற்கு கதாபாத்திரங்கள் எப்படி உயிர் கொடுத்திருக்கிறார்களோ அதே போல தன் இனிமையான இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசை ஆஹா,ஓஹோ என சொல்லும் அளவுக்கு அற்புதமாக இருக்கிறது.அதிலும் ''அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'' பாடலும் ''உன் பேரை சொல்லும்போதே'' பாடலும் அற்புதம்.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.இந்த பாடல்கள் இனி அனைத்து மொபைல்களிலும் ரிங்டோனாகவும்,டயலர் டோனாகவும் வலம் வருவதை அனைவரும் காணத்தான் போகிறோம்.குறிப்பாக ''உன் பேரை சொல்லும்போதே'' பாடல் எல்லா வலிகளிலிருந்தும் அடைகாக்கும் காதலின் உள்ளங்கை வெப்பத்திற்கு சமம்.எங்கே போவேனோ பாடல் காதலின் வலியை நமக்கும் உணர்த்துகிறது.அனைத்து பாடல்களுமே அற்புதமாய் இருக்கிறது.இவர்களின் இசை படத்திற்கு இன்னுமொரு பெரியபலம்.

ரிச்சர்ட்:
இவரின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.ரங்கநாதன் தெருவில் நடப்பதே மிகவும் கடினம்.இதில் கேமராவை வைத்து விளையாடி இருக்கிறார் ரிச்சர்ட்.வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது.ரங்கநாதன் தெருவை இவ்வளவு அழகாக காண்பித்து ஆச்சர்ய படவைகுறீர்கள்.அங்காடித்தெரு உங்களால் தான் இவளவு அழகாக இருக்கிறது.ஆனால் இதை தர நீங்கள் என்ன கஷ்ட்ட பட்டிருப்பீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.


முத்துக்குமார் & ஜெயமோகன்:

இவர்கள் இருவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அற்புதமாய் ஆழமாய் இருகின்றன.பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமான வார்த்தைகள் இருப்பது அந்த பாடல்களுக்கே உள்ள அழகு.மீண்டும் நிரூபித்திருக்கிறார் முத்துக்குமார்.வாழ்த்துக்கள் சார்.ஜெயமோகன் சமீபகாலமாக அழுத்தமாகவும் ஆழமாகவும் அழகாகவும் வசனங்கள் எழுதி வலம் வருகிறார்.அனைத்து வசனங்களும் ஆணிதனமானவை.குறிப்பாக குளியலறையின் அருகில் கனியிடம் லிங்கு பேசும் வசனம்.கனி சோபியிடம் ''இவன் ஒருவநிடமாவது மான,ரோஷத்துடன் இருக்கிறேனே என்று சொல்லும் வசனம்.குள்ள மனிதரின் மனைவி குழந்தை பெற்று வரும் போது பேசும் வசனம்.விக்குறவன் தான் இங்க ஜெயிப்பான் இப்படி பல வசனங்கள் திரையரங்கை கைதட்டல்களால் அதிரவைக்கும் வசனங்கள்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்சார்.

A. வெங்கடேஷ் :
இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை.கண்களாலேயே மிரட்டுகிறார்.அவர்கள் மிரல்கிறார்களோ இல்லையோ நாம் நன்றாகவே மிரல்கிறோம்.சார் இந்த வருடத்தின் சிறந்த வில்லன் நீங்கள் தான்.திரையரங்குகளில் உங்களை மிகவும் கேவலமாக திட்டுகிறார்கள்.அது தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.வாழ்த்துக்கள்சார்.

பாண்டி:
இவரை வசந்தபாலன் தான் முழுமையாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.நல்ல நகைசுவையாளர்.நல்ல குணசித்திர நடிகர்.படம் இன்னும் அழகாக செல்ல இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.உங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயமாய் உண்டு சார்.வாழ்த்துக்கள்.இவருக்கு ஜோடியாக வரும் சோபியும் நன்றாக நடித்திருக்கிறார்.இவர் இந்த படத்திற்காக தன் இடுப்பு வரை இருந்த அழகான கூதலையே வெட்டி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.லிங்குவின் தங்கையாக வரும் குட்டி அந்த பையை வாங்கும் காட்சியில் அதகளபடுதியிருக்கிறார்.கனியின் தங்கையாக வரும் நாகுவின் நடிப்பும்யதார்த்தம்.

இவர்கள் மட்டுமல்ல செல்லவராணி,சௌந்தரபாண்டி,பழகருப்பையா,குள்ள மனிதர்,அவரின் மனைவி,கண் தெரியாத முதியவர்,குப்பை பொறுக்கும் முதியவர்,பிச்சையெடுக்காமல், கழிப்பறையை சுத்தம் செய்து உழைத்து நல்லநிலமைக்கு வரும் மனிதர் இப்படி இன்னும் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும்,அழகாகவும்,அற்புதமாகவும்,பயன்படுத்தி நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல ரசிகனாக இந்த படத்தில் ஒரு சிறுய குறையும் இல்லை என்று நான் சொல்வேன்.
கடந்த 5 வருடங்களில் இது போன்ற படம் வந்ததில்லை
கடந்த 10 வருடங்களில் மிகச்சிறந்த கிளைமாக்ஸ் இதுதான்.இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த கதாநாயகி,கதாநாயகன்,வசனகர்த்தா,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,கேமராமேன்,நகைச்சுவையாளர்,சிறந்த கதை என அனைத்து பிரிவுகளிலும் விருது வாங்குவதுநிச்சயம்.
நான் படத்தை முதலில் பாரத் என்ற திரை அரங்கில் தான் பார்த்தேன்.கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த திரை அரங்கும் எழுந்து நின்று கைதட்டியது.இதுவரை நான் இப்படி மக்கள் செய்துபார்க்கவில்லை.
ஒரு முக்கியமான சம்பவத்தை சொல்ல மறந்து விட்டேன்.படம் வெளியான போது சென்னையில் பல திரை அரங்குகளில் படத்தை வாங்கவில்லை.படம் வெளிவந்து 2 நாட்களுக்கு பிறகே அனைத்து திரையரங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்க தொடங்கினர்.அது மட்டுமில்லை நான் சாந்தி தேட்டர் அருகில் தான் வேலை செய்கிறேன் அங்கு அங்காடித் தெருவுக்கு மிகச்சிறிய அளவே பேனர் வைத்திருந்தார்கள்,அது கூட தலைமைச்யலகத்தை பார்த்த மாதிரி.அங்கு அசல் படத்திற்கு மிகப்பெரிய
பேனர்கள் வைத்திருந்தார்கள்.எனக்கு கோவம் தான் வந்தது.ஆனால் சரியாக 2 நாட்கள் கழித்து அசல் பேனரை எடுத்து விட்டு அதே இடத்தில மிகப்பெரிய பேனர் வைத்தார்கள்.மிகவும் சந்தோஷப்பட்டேன்.படம் பேசபடதொடங்கிவிட்டது என்று.இப்போது படம் சாதாரண நாட்களிலேயே House புல் காட்சிகளாக போய்கொண்டிருக்கிறது.மிகவும் மகிழ்சியாயிருக்கிரேன். நம் தமிழ் மக்கள் எப்பொழுதும் நல்ல படங்களை கைவிடுவதில்லை.தலை மீது வைத்து கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த அங்காடித் தெரு அழகான,அற்புதமான,ஆர்ப்பாட்டமில்லாத பல உண்மையான சம்பவங்களையும்,திருப்பங்களையும் கொண்ட திறமையான ஒரு படைப்பாளியால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தெரு.

அங்காடித் தெரு அற்புதமான படைப்பு.